கல்வி அமைச்சர் கெளரவ சுசில் பிரேமஜயந்த அவர்களுடனான கலந்துரையாடல்

2022.11.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலகத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சர் கெளரவ சுசில் பிரேம ஜயந்த அவர்களுடனான கலந்துரையாடல் கல்வி அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இஸ்லாம் பாடத்திட்டம் பற்றியும் பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடநூல் விநியோகத்தின் தாமதநிலை குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் ஜம்இய்யா சார்பாக பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். ரிபா ஹஸன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ றிஷாத் பதியுத்தீன் மற்றும் கல்முனை நீதிக்கான மையத்தின்  (Centre for Justice) பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன