அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு விஜயம் – காலை ஆராதனையில் சொற்பொழிவும் நிகழ்த்தினார்

2025.06.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி உள்ளிட்ட ஜம்இய்யாவின் குழுவினர் காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் தலைவர் அவர்கள் கல்லூரி காலை ஆராதனை நிகழ்வில் மாணவர்கள் முன்னிலையில் சொற்பொழிவும் நிகழ்த்தினார்.

கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் எம்.ஏ. நிஹால் அஹமட் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் குழுவினர் குறித்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கல்லூரி தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து அதிபர் அவர்களுடன் கலந்துரையாடிய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் கல்லூரி ஆசிரியர்களோடும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதில், ஜம்இய்யாவின் காத்தான்குடி கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அல்-ஹாஜ் எம்.ஐ. கபூர் (மதனி) மற்றும் கிளையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருத்தனர்.

 

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன