2025 ஆகஸ்ட் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவினால் காத்தான்குடி ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
ஜம்இய்யாவின் காத்தான்குடி கிளை மற்றும் ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இவ்வழிகாட்டல் நிகழ்வில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –





