2025.04.25ஆம் திகதி, பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோர் கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் சார்பில் இரங்கல் செய்தியொன்றும் தூதரக பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் தமது குறிப்புக்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –