இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கௌரவ அதிதியாக பங்கேற்பு.

2025 ஜூலை 30ஆம் திகதி, இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கௌரவ அதிதியாகவும், பிரதம பேச்சாளராகவும் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கொள்ளுபிட்டிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல். வாசு பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகள், கொள்ளுப்பிட்டிய ஜுமுஆ பள்ளிவாயல் இமாம்கள், நிர்வாகிகள், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன