‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின் கௌரவ பொதுச் செயலாளர் சகோதரர் டில்வின் சில்வா அவர்களுடன் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025.02.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின் கௌரவ பொதுச் செயலாளர் சகோதரர் டில்வின் சில்வா அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள், செயற்றிட்டங்கள் குறித்த தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் நாட்டின் பொருளாதாரம், கல்வி, சமூக நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சகோதரர் டில்வின் சில்வா அவர்களுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புடன் ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக், குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஸித், இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எம். ஆஸாத், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சல்மான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன