2025 நவம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில், கம்பளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இளைஞர் பயிற்றுவிப்பாளர்களுக்கான இருநாள் பயிற்சி செயலமர்வு மிஸ்பாஹிய்யஹ் அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில், கம்பளை பிரதேசத்தினை சேர்ந்த 16 பயிற்றுவிப்பாளர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –


