ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ப்ரான்ச் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு சிநேகபூர்வ விஜயம்

2024.03.11ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ப்ரான்ச் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஜம்இய்யாவின் பிரதிநிநிதிகளுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.

வருகை தந்திருந்த பிரதிநிதிகளுக்கு ஜம்இய்யாவின் பணிகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிமுகம் வழங்கப்பட்டதோடு இலங்கையில் சமூகங்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் மார்க்-ஆன்ட்ரே ப்ரான்ச் அவர்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மாக்கார் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன