களுத்துறை மாவட்டம்-வியாங்கல்ல அனர்த்த நிவாரணக் குழுவின் ஒருங்கிணைப்பில் அனர்த்த நிவாரணத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதி ஜம்இய்யாவிடம் கையளிப்பு

2025 டிசம்பர் 16ஆம் திகதி, களுத்துறை மாவட்டம்-வியாங்கல்ல அனர்த்த நிவாரணக் குழுவின் ஒருங்கிணைப்பில் வியாங்கல்ல மஸ்ஜித் நிர்வாகங்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரது முயற்சியினால் அனர்த்த நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட சுமார் இருபத்தேழு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா நிதி (2,740,000/=) ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் வழிகாட்டலுக்கிணங்க இந்நிதி சேகரிக்கப்பட்டதுடன் குறித்த நிதியினை வியாங்கல்ல அனர்த்த நிவாரணக் குழுவின் உறுப்பினர்கள் ஜம்இய்யாவிடம் கையளித்தனர்.

இதில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், வியாங்கல்ல அனர்த்த நிவாரணக் குழுவின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன