2025.04.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய இணையத்தளமானது ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், முன்னாள் உப தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எச்.ஆதம்பாவா ஆகியோரினால் தலைவர், பொதுச் செயலாளர், நிறைவேற்றுக் குழு மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் முன்னிலையில் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நேற்று முற்பகல் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக் கூட்டத்தின் போதே குறித்த புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோருடன் உப தலைவர்கள், உப செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –