2024.01.19ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் தல்துவ ஜுமுஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் தல்துவ முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.
இச்செயலமர்வில் தல்துவ முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 230க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –