2024.02.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் வழிகாட்டலில் யடிஹேன அல்-முஸ்தபா முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் மற்றும் வலுவூட்டல் செயலமர்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் குறித்த பாடசாலையிலிருந்து சுமார் 134 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப்பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –