2025.04.26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவினால் கேகாலை மாவட்டத்திலுள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளில் இருந்து இளைஞர் விவகாரம் குறித்த பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட ஆலிம்களுக்கான 02ஆம் கட்ட பயிற்சி செயலமர்வு கிரிங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் கேகாலை மாவட்டத்திலுள்ள பிரதேசக் கிளைகளில் இருந்து 15 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –