அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை கேகாலை மாவட்டம் மாவனல்லை, ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ பள்ளிவாசலில் 26.11.2017ம் திகதி ஞாயிற்றறுக் கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கிறது.

மேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.
1.சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு- அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) பிரசாரக்குழு செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

2. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான வழிகாட்டல் – அஷ்-ஷைக் A.C அகார் முஹம்மத்- பிரதித்தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

3. உலமாக்களுக்கான  குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல்- அஷ்-ஷைக்M.A.M ஹாரிஸ் (ரஷாதி) – இணைப்பாளர் பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

4. காளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுடளான கலந்துரையாடல் அஷ்-ஷைக் K.M அப்துல் முக்ஸித் – செயலாளர் மகளிர் விவகாரக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

5. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) – அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் – இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு – அகில இலங்கை ஜம்,ய்யத்துல் உலமா.

எனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன