அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை பொலன்னறுவை மாவட்டம் கதுறுவெல ஜும்ஆ மஸ்ஜில் இன்று  18.10.2017ம் திகதி புதன் கிழமை காலை 9.00 மணி முதல் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

மேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

  1. சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு – அஷ்-ஷைக் உமர்தீன் (செயலாளர் பிரசாரக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
  2. பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் – அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
  3. உலமாக்களுக்கான குத்பா கரத்தரங்கு -அஷ்-ஷைக் அலியார் (நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.)
  4. காழிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுக்கான கலந்துரையாடல் – அஷ்-ஷைக் ஹலீல். (பொருளாலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
  5. தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி (தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
  6. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் எனும் சிறு நூல்கள் பற்றிய சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) – PPT  – அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் – இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன