ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு, ஃபத்வாக் குழு மற்றும் தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் ஆகியோரிடையே இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்

2024.08.26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு, ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் ஆகியோரிடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடப் புத்தகங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதில் தேசிய கல்வி நிறுவகம் சார்பில் அஷ்-ஷைக் ஜஸார், அஷ்-ஷைக் நாழிம், அஷ்-ஷைக் புஹாரி, அஷ்-ஷைக் ஹுஸ்னி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஜம்இய்யா சார்பாக தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், ஃபத்வாக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஸ்தபா ரஸா, ஃபத்வாக் குழுவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.ஏ.எம். அன்பாஸ், அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம், அஷ்-ஷைக் எம்.என். அப்ராஸ், அஷ்-ஷைக் வை. நிஹார், அஷ்-ஷைக் எம்.எஸ். பைஸர், அஷ்-ஷைக் ஷரஃப், அஷ்-ஷைக் ருஸைக், ஃபத்வாக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம், துணை இணைப்பாளர் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன