20.11.2017 (30.02.1439)
ரபீஉனில் அவ்வல் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான ஒன்றுகூடல் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் பிறைக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 19.11.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அவ்வொன்றுகூடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிழ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள்இ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன் ஹனபிப் பள்ளிவாசல் நிருவாகிகள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இக் குழு நாடெங்கிலும் உள்ள தமது உப பிறைக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதோடு; அன்றைய தினம் பிறை தென்பட வாய்ப்புள்ள களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பானம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களினதும் பொத்துவில், காத்தான்குடி, நிகவெரட்டி போன்ற பிரதேசங்களின் பிரதிநிதிகளையும் தொடர்பு கொண்டனர்.எவ்விடத்திலிருந்தும் பிறை தென்பட்டதற்கான தகவல் கிடைக்காமையால். அங்கு கூடியிருந்த உலமாக்கள் உள்ளிட்ட குழுவினர் ஸபர் மாதத்தை பூரணப்படுத்தி 21.11.2017 செவ்வாய்க்கிழமை ரபீஉனில் அவ்வல் மாதத்தை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.
அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
பிறைக் குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா