ரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வருமாறு கோரி ஐந்து கடிகங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரோஹின்யா முஸ்லீம்களுக்கு நீதியையும் இநிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஐக்கிய நாடுகள் சபை,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம். (OHCHR),இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
அத்துடன் இலங்கையில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்திற்கும் ரோஹின்யா மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து அவற்றை உடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு துருக்கி நாட்டின் ஜனாதிபதி தய்யிப் உர்துகானின் ரோஹின்யா முஸ்லீம்கள் மீதான சிறந்த முன்னெடுப்பினை பாராட்டியும் அதனை தொடர்ந்து முன் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் கடிதமொன்றினை துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இது தொடர்பில் நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்; மியன்மார் அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெறும் ரோஹின்யா மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பினை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டி கடிதம் மூலம் ஜம்இய்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா