2024.12.31ஆம் திகதி, இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக பதவியேற்ற லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் பதவியேற்பு சம்பிரதாய நிகழ்வில் முஸ்லிம் சமயத் தலைவர்கள் சார்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இராணுவத் தலைமையகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்களும் புதிய இராணுவத் தளபதி அவர்களுக்கு தமது ஆசிகளை வழங்கினர்.
நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டிருந்த ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் நாட்டின் நலனுக்காகவும், இராணுவத் தளபதி அவர்களின் பணிகள் சிறக்கவும் விஷேட துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –