அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக் கூட்டம் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது

2025 ஜூலை 26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக் கூட்டம், தலைவர் முஃப்தி எம். ஐ. எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ், ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில், ஜம்இய்யாவின் யாப்புத் திருத்தம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், மத்திய குழு உறுப்பினர்களால் திருத்தத்திற்கான பல்வேறு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டம் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றதுடன், இரண்டாவது அமர்வை ஜம்இய்யாவின் உப செயலாளர் அஷ்-ஷைக் எம். எஸ். எம். தாஸிம் அவர்கள் நெறிப்படுத்தினார்.

ஜம்இய்யாவின் மத்திய குழு உறுப்பினர்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன