இரங்கல் செய்தி

2020.11.18

ஸ்ரீ லங்கா ராமாஞ்ஞ நிகாயவின் பிரதம மதகுரு சங்கைக்குரிய நாபான பிரேமசிரி தேரர் அவர்களின் மறைவினையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றது.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கும் ஒரு சிறந்த பௌத்த சமூகத்தை உருவாக்குவதற்கும் நீண்டகாலம் உழைத்த தேரர் அவர்கள் சகவாழ்வு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றால் வளமான ஒரு தாய் நாட்டை உருவாக்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார்.

எல்லோராலும் பாராட்டத்தக்க அன்னாரின் தூய்மையான பணியை தொடர்வதும், அவரது இலக்கினை முன்னோக்கி அனைத்து இலங்கையர்களும் உறுதியுடன் செயல்படுவதும், அன்னாருக்குச் செலுத்தும் மிகப்பெரிய மரியாதையும் கௌரவமுமாகும்.

இலங்கை முஸ்லிம் சமூகமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் பௌத்த சமூகத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

 

இப்படிக்கு

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன