2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் ‘சர்வஜன பலய’ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திலித் ஜயவீர அவர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்கள் தலைமையில் ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது.
கௌரவ திலித் ஜயவீர அவர்களது தரப்பில் சந்திப்பொன்றிற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இச்சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் கடந்த காலப் பணிகள் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன், அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை ஜம்இய்யா எப்போதும் வழங்கி வருவதும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ திலித் ஜயவவீர அவர்கள் தமது தரப்பு அரசியல் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து அறிமுகம் வழங்கியதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இதில், ‘சர்வஜன பலய’ கட்சியின் பொதுச் செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில் பதில் தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –