அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகள்

2025 செப்டம்பர் 19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான இரண்டு விசேட வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

அந்தவகையில், கம்பளை – போதலப்பிட்டிய மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாயலில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.

அதேபோன்று, கம்பளை – ஆன்டியாகடவத்த ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 90 பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன