2025.02.16 ஆம் திகதி, இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில், விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், மேற்கத்தைய நாடுகளில் வசிப்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை மார்க்க ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது, பிள்ளைகளின் எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது, சமூக ஒற்றுமையின் முக்கியத்துவம் போன்ற பல பயனுள்ள விடயங்களை ஆண்களுக்கும் பெண்களுக்குமென வெவ்வேறாக தெளிவாகவும் பல நடைமுறை உதாரணங்களோடும் எடுத்துரைத்தார்.
குறித்த நிகழ்ச்சியில், பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இரண்டு வயது முதல் 17 வயது வரையான 35 சிறார்கள் பங்கு பற்றியதுடன் அவர்களால் தமது திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன.
மேலும், நிகழ்வில் ஒரு புது முயற்சியாக 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அல்-குர்ஆனை பார்த்து ஓதும் போட்டி நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் நிகழ்வில் பங்குபற்றிய சிறுவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
– ACJU Media –