ACJU/NGS/2025/196
2025.11.12 (1447.05.20)
2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2025.11.10ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 05ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது.
நேர அட்டவணையின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்குப் பிறகும் சில பரீட்சைகள் நடைபெறவிருப்பதனால் மாணவர்களது நலன் கருதி ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையினை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் முடிவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறும் பரீட்சை முடிவடையும் வரை இதனை நடைமுறைப்படுத்துமாறும் சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கிறது.
– ACJU Media –





