குனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்.

2018.03.05
உலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும் இன்று முதல் தொடராக ஒரு வாரத்துக்கு, தொழுகைகளில் குனூத் அந்-நாஸிலாவை ஓதி வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.

அத்தோடு, மஸ்ஜித்களில் இமாம்கள் குனூத் அந்-நாஸிலாவை ஓதும் பொழுது தேவையான துஆக்களை மாத்திரம் ஓதி குனூத் அந்-நாஸிலாவை சுருக்கமாக அமைத்துக்கொள்ளுமாறு மஸ்ஜித் இமாம்கiளை வேண்டிக்கொள்கிறது. குனூத் அந்-நாஸிலா பற்றிய மேலதிகத் தெளிவுகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளவும்.

http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/927-2016-11-27-15-19-40

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன