2025.05.07 – 1446.11.08
1. தெளிவான கண்டனம்:
வலிமிகுந்த இதயங்களுடனும், நீதி உணர்வுடனும், இஸ்ரேலின் சியோனிச ஆட்சியால் காசாவில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற இனப்படுகொலைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பல மாதங்களாக, பொதுமக்கள் உட்கட்டமைப்பு – மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குண்டுவீசித் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இது ஒரு மரபு ரீதியான போர் அல்ல. உண்மையில் இது கொடூரத்தனமான இன அழிப்பும் பிரச்சாரமும் ஆகும். மனித உரிமைகளின் ஆதரவாளர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. கூறப்பட்ட அட்டூழியங்களுக்கு முன்னால் இத்தகைய மௌனம் உடந்தையாக இருப்பதற்குச் சமமாகும்.
2. சர்வதேச சமூகத்திற்கான அழைப்பு:
சர்வதேச சமூகம், பாலஸ்தீனிய உயிர்களின் தொடர்ச்சியான இழப்புகளை இனி அரசியல் விசுவாசங்களினாளோ அல்லது பொருளாதார நலன்களினாளோ மறைக்க முடியாது. குறிப்பாக வளர்ந்த நாடுகளின் தலைவர்கள், தீர்க்கமாகவும் விரைவாகவும் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயக மற்றும் மனிதாபிமான விழுமியங்களை இதயங்களிள் கொண்டவர்கள், தடைகளை விதித்தல், இராணுவ உதவியை துண்டித்தல் மற்றும் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துதல் போன்றவற்றின் மூலம் உடனடி, தீர்க்கமான, அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். இந்த வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோருவதில் சர்வதேச சிவில் சமூகம் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
3. இலங்கை அரசாங்கத்திற்கான அழைப்பு.
இந்த விடயத்தில் உறுதியானதும், கொள்கை ரீதியானதுமான நிலைப்பாட்டை எடுக்குமாறு எமது சொந்த நாடான இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் காத்திரமான வேண்டுகோளை விடுக்கின்றோம். காசாவில் நடக்கும் அட்டூழியங்களைப பார்த்துக் கொண்டு இலங்கை அமைதியாக இருக்கவோ அல்லது ஒத்துப்போகவோ கூடாது. நமது நாடானது இரக்கம், நீதி மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மை ஆகியவற்றில் வேரூன்றிய பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ போதனைகளால் வளர்க்கப்பட்டதாகும். அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலையை எதிர்கொள்வதில் நடுநிலைமை வகிப்பது ஒரு நெறிமுறை அற்றதாகும். எமது மக்களின் அறம் சார்ந்த விழிப்புணர்வைப் பிரதிபழிக்கச்செய்யுமாறும் வரலாற்றின் சரியான நெறிமுறைப் பக்கத்தில் இருக்குமாறும் எமது தலைவர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
4. நேசமுள்ள இலங்கையர்களுக்கான செய்தி.
சக இலங்கையர்களுக்கு, ஒற்றுமை, நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய செய்தியை நாங்கள் வழங்குகிறோம். இந்த முக்கியமான தருணங்களில், மனிதநேயத்தின் அடிப்படையில் உறுதியாக நின்று, பிரார்த்தனை, ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாதிடுதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் உள்ளிட்ட அமைதியான மற்றும் சட்டபூர்வமான வழிமுறைகள் மூலம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.
நீதிக்காக நாங்கள் குரல் கொடுக்கும் அதே வேளையில், அமைதியைப் பேணுதல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் மற்றும் இலங்கையின் ஒற்றுமையைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். நமது ஒரே குரல் வலிமையாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதோடு, அழிவுகரமானதாகவும், பிளவுபடுத்தும் வகையிலும் அமைந்துவிடக்கூடாது. நமது குரல்கள் கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும், சட்ட எல்லைகளுக்கு மதிப்பளித்தும் எழுப்பப்பட வேண்டும்.
5. நம்பிக்கை / மதம் மற்றும் அரசியல்:
உலகளாவிய நிகழ்வுகள் குறித்து துல்லியமாகவும் சமநிலையுடனும் நம்மையும் மற்றவர்களையும் கூட்டாகப் பயிற்றுவிப்பது மிகவும் முக்கியமானதாகும். பௌத்தம், இந்து மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற அனைத்து பிரதான மதங்களைப் போலவே யூத மதமும் அமைதிக்கான மதமாகும். சியோனிசம் போன்ற அரசியல் சித்தாந்தங்களை அத்தகைய எந்த பிரதான மதங்களுடனும் இணைக்கக்கூடாது. இத்தகைய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் நம்பிக்கை / மதத்திற்கு எதிரானவை என்று நாம் மிகத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
மேலும், மேற்கத்திய நாடுகளில் உள்ள பெரும்பான்மையான குடிமக்கள் அவர்களின் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் அல்ல என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் பலர் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள், மற்றவர்களை விட அதிகமாக குரல் கொடுக்கிறார்கள்.
பிரிவினைக்கு அல்ல ஒற்றுமைக்கானதும், பகைமையை வளர்ப்பதற்கு பதிலாக புரிதலினை மேம்படுத்தவும், அந்நியப்படுத்தாது, உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும் இதுவே நேரமாகும்.
6. முடிவுரை:
அநீதியை கண்ணியத்துடனும், ஞானத்துடனும், சட்டத்தின் ஆட்சியின் கட்டமைப்பிற்குள்ளும் எதிர்கொள்வோம். நமது குரல்கள் உண்மையை உயர்த்தட்டும், நமது இதயங்கள் இரக்கத்தில் வேரூன்றி இருக்கட்டும், நமது செயல்கள் நமது நம்பிக்கை மற்றும் குடியுரிமையின் உயர்ந்த கொள்கைகளை பிரதிபலிக்கட்டும்.
நமது தாய்நாடான இலங்கையின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், நீதிக்காக நாம் போராடலாம்.
நீதி வெல்லட்டும். ஒடுக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறட்டும். கொடுங்கோன்மைக்கு எதிராக மௌனம் காப்பது துரோகம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
All Ceylon Jamiyyathul Ulma – ACJU | Muslim Council of Sri Lanka – MCSL | Colombo District Masjids Federation – CDMF | National Shoora Council – NSC | All Ceylon YMMA Conference – YMMA | Sri Lanka Jama’athe Islami – SLJI | United Thawheed Jamth – UTJ | Supreme Council of Sufi Thareeqas-( SCOT) | Salamah Society | All Ceylon Thawheed Jamath – ACTJ | Council for Community Initiatives – CCI | All Ceylon Union of Muslim League – ACUMLYF | RPSL Consortium | Al-Muslimath | Sri Lanka Muslim Media Forum | Advocacy & Reconciliation Council -ARC | All University Muslim Students Association – AUMSA | Association of Muslim Youth of Sailan- AMYS