ACJU/NGS/2025/185
2025.10.22 – 1447.04.29
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ்
2025.10.21 ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் எதிர் வரும் சில நாட்களில் நாட்டின் பல பாகங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் பொது மக்கள் அது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.
அத்துடன், பலத்த மழைவிழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்கள் அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடந்து கொள்ளுமாறும், ஆலிம்கள் தத்தமது பிரதேச மக்களுக்கு இது போன்ற நிலைகளில் எவ்வாறு செயற்பட வேண்டுமென வழிகாட்டுவதுடன் கீழ் வரும் துஆவை அதிகமாக ஓதிவர ஆர்வமூட்டுமாறும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி அவனது உதவிகளை பெற்றுக் கொள்ள வழிகாட்டுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
காற்று வேகமாக வீசும் போது ஓத வேண்டிய துஆ:
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ (முஸ்லிம் 899)
தேவையை விட மழை அதிகரித்தால் ஓதும் துஆ:
اللهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا ، اللهُمَّ عَلَى الأَكَامِ وَالجِبَالِ وَالآجَامِ وَ الظَّرَابِ والاَودِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
யா அல்லாஹ்! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப்பொழியச் செய்வாயாக) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது இம்மழையைப்பொழியச் செய்வாயாக! (புகாரி:1013)
அல்லாஹுத்தஆலா சீரான காலநிலையைத் தந்து நம்மனைவரையும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பானாக.
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை






